Close

தொற்றாநோய் தடுப்பு பிரிவு

தேதி : 30/09/2013 - | துறை: சுகாதாரம்

தமிழகத்தில் 10.4% பேர் நீரிழிவு நோயாலும், 20 % பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 23 % பேர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய நோயிகளிலான இறப்பு விகிதம் தமிழகத்தில் 360 டொ 430 / 100000 ஆகும். இது இந்திய அளவில் மிக அதிகமாக உள்ளது. எனவே தொற்றா நோய்களானது மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்ப்படுத்துகின்றது.

இப்பிரிவில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை கொடுக்கபடுகிறது. மேலும் 30 வயதிற்க்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் கர்ப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகின்றது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

30 வயதிற்குமேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி பயன் பெறலாம்.

பயனாளி:

30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும்

பயன்கள்:

30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை கொடுக்கபடுகிறது